கல்லூரிக் காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு - 5

12/04/2010 01:54:00 PM

அந்த கடைசி நாள்
==================
கனவுகள் நிறைந்த கண்களுடன்
தயக்கத்துடன் கல்லூரியில் நான்
கால்பதித்த அந்த முதல் நாள் ....
சின்னதான ஒரு அறிமுகம் ..
பெரிய எதிர்பார்ப்பு ..
பெரிய நண்பர்கள் வட்டம் ,
ஒவ்வொரு மாலையும் கிரிகெட்
விளையாடி களைப்புடன் வீடு சென்ற
அந்த இன்பமான நாட்கள் ......!
சுதந்திரதின நாளில் நான் வாங்கிய
அந்த முதல் பரிசும் அதனால்
எனக்கு அறிமுகமான நண்பர்களுடனும்
இளநிலையின்  இறுதிநாளில் கண்ணீருடன் விடைபெற்றோம் .

மீண்டும் அதே கல்லூரியில்
தொடருவோம் என தெரியாமலே ..... !

இந்தமுறை மீண்டும் அருமையான
ஒரு நண்பர்கள் வட்டம்
எத்தனையோ இனிமையான
நினைவுகளையும்  சில துன்பமான
சம்பவங்களையும்  உடனே சுமந்த
இந்த கடந்த காலம் கண்டிப்பாக
ஒரு பசுமையான நினைவுகளின் தொகுப்பு ...
கல்லூரி வாழ்க்கையின் இறுதிநாளில்
நண்பர்கள் குறைவாகவே பேசினார்கள் ..
ஆம் .. அவர்களிடம் தன் சொந்தக் குறிக்கோளைப்
பற்றிய எண்ணம் மிகுதியாக இருந்தது
தெரிந்தது ... அதுதான் சரியானது ....

ஆம்....

வாழ்க்கையின் போக்கில் மீண்டும்
ஒருநாள் அனைவரும் சந்திக்கலாம் .....!
அன்று இதே பழைய நினைவுகள்
எங்கள் இதயத்தை விட்டு நீங்காமல் இருக்கும் .....!

நேரில் இருக்கும் போது
மகிழ்வுடன் இருந்தாலும் , பிரிவின்போது
என் கண்களில் லேசான நீர் ததும்பியது...!
அது சோகத்தினால் அல்ல .....!
தொலைவால் பிரிந்தாலும் உணர்வினால்
மிகவும் நெருங்கிய நினைவுகள்
ஒன்று சேர்ந்த அந்த கடைசிக் கல்லூரி நாள்  நினைவுகளுடன் 
[written on 27.09.2006] Wednesday

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook