இரட்டை இலையும்... உப்பனாறு கரையும்!

1/17/2013 06:05:00 PM

இரட்டை இலையும்... உப்பனாறு கரையும்!
எம்.ஜி.ஆர் சமாதியை, எட்டு கோடி செலவில் புதுப்பித்து, பிரமாண்டமாக இரட்டை இலை சின்னத்தை கட்டியமைத்து, சத்தம்போடாமல் (டிசம்பர் 09) திறந்து வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!
'எம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை சின்னத்தை வைக்கிறார்கள். அரசாங்க பணத்தில் இப்படி ஒரு கட்சியின் சின்னத்தை வைப்பது தவறு. இதைத் தடை செய்ய வேண்டும்' என்று கடந்த பத்து, பதினைந்து நாட்களுக்கு முன், தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 
நியாயம்தான். இப்படி, ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை, அரசாங்கப் பணத்தில் அமைக்கக் கூடாதுதான் (உத்தர பிரதேசத்தில் கூட மாயாவதி ஆட்சியில் அவருடை கட்சி சின்னமான யானையை இப்படி பல இடங்களில் கட்டி அமைத்ததை, உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது). இதே நியாயத்தை ஏற்கெனவே ஆட்சியில் இருந்தபோது இந்த தி.மு.க-வும் கடைபிடித்ததா?

தன்னுடைய ஆட்சிக் காலத்தில், பணத்தைக் கொட்டி திரும்பத் திரும்ப அண்ணா சமாதியைப் புதுப்பித்த கருணாநிதி, அதன் நுழைவாயிலில் உதயசூரியன் சின்னத்தைப் பதித்துக் கொண்டார்.

இதையடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 'அதெப்படி அரசியல் கட்சியின் சின்னம் இருக்கலாம்' என்று சொல்லி, அதை அண்ணா சமாதியிலிருந்து நீக்கி, நியாய தர்மத்தை நிலை நாட்டினார். ஆனால், அந்த நியாயத்தை, இப்போது ஆட்சிக்கு வந்தபோது காற்றில் பறக்கவிட்டு, இரட்டை இலையை எம்.ஜி.ஆர் சமாதியில் கட்டி அமைத்திருக்கிறார் ஜெயலலிதா கோடிகளைக் கொட்டி!

ஆகக்கூடி, இவர்களுக்கு நியாயம், தர்மம் எல்லாம்... 'கிலோ என்ன விலை?' என்கிற கதைதான்.
இவர்கள் சொந்தப் பணத்தில் எத்தனை சூறைத் தேங்காய் வேண்டுமானாலும் உடைக்கட்டும். நம்முடைய பணத்தில் எதற்காக இத்தனை ஊதாரிச் செலவுகள்?
இதோ... நாகப்பட்டினம் மாவட்டம், புதுப்பட்டினம் அருகே இருக்கும் ஆரப்பள்ளம் கிராமத்திலிருக்கும் உப்பானாற்றின் கரைகள் சரியாக இல்லாததால், அதன் வழியாக உள்ளே புகும் கடல் நீர், விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது வாடிக்கையாகவே இருக்கிறது. இது குறித்து பல ஆண்டுகளாக கலெக்டர்களிடம் மனு கொடுக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களாக வருபவர்களும் எட்டிப் பார்க்கிறார்கள்.
கடைசியில், 'போதுமான நிதியில்லை... சீக்கிரமே முயற்சி பண்ணுவோம்' என்றே சொல்லிக் கலைகிறார்கள்.
இது ஓர் உதாரணம்தான். இதேபோல தமிழகம் முழுக்க ஏகப்பட்ட அதிஅத்தியாவசியமான பணிகள் செய்து முடிக்கப்படாமலேதான் இருக்கின்றன.

நாட்டுக்கு மிகமிகத் தேவையானது விவசாயம். அத்தகைய விளைநிலங்களைக் காப்பாற்றும் வகையில் ஆற்றின் கரையை உயர்த்த சில கோடிகள் தேவைப்படுகின்றன. அதற்கெல்லாம் நிதி இல்லை. ஆனால், ஏற்கெனவே கோடிகளில் இழைக்கப்பட்டு நன்றாக இருக்கும் அந்த இரண்டு சமாதிகளுக்கும் மீண்டும் கோடிகளைக் கொட்டுகிறார்கள்.-


தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

தன்னுடைய ஆட்சிக் காலத்தில், பணத்தைக் கொட்டி திரும்பத் திரும்ப அண்ணா சமாதியைப் புதுப்பித்த கருணாநிதி, அதன் நுழைவாயிலில் உதயசூரியன் சின்னத்தைப் பதித்துக் கொண்டார்.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 'அதெப்படி அரசியல் கட்சியின் சின்னம் இருக்கலாம்' என்று சொல்லி, அதை அண்ணா சமாதியிலிருந்து நீக்கி, நியாய தர்மத்தை நிலை நாட்டினார். ஆனால், அந்த நியாயத்தை, இப்போது ஆட்சிக்கு வந்தபோது காற்றில் பறக்கவிட்டு, இரட்டை இலையை எம்.ஜி.ஆர் சமாதியில் கட்டி அமைத்திருக்கிறார் ஜெயலலிதா கோடிகளைக் கொட்டி!
ஆகக்கூடி, இவர்களுக்கு நியாயம், தர்மம் எல்லாம்... 'கிலோ என்ன விலை?' என்கிற கதைதான்.இவர்கள் சொந்தப் பணத்தில் எத்தனை சூறைத் தேங்காய் வேண்டுமானாலும் உடைக்கட்டும். நம்முடைய பணத்தில் எதற்காக இத்தனை ஊதாரிச் செலவுகள்?இதோ... நாகப்பட்டினம் மாவட்டம், புதுப்பட்டினம் அருகே இருக்கும் ஆரப்பள்ளம் கிராமத்திலிருக்கும் உப்பானாற்றின் கரைகள் சரியாக இல்லாததால், அதன் வழியாக உள்ளே புகும் கடல் நீர், விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது வாடிக்கையாகவே இருக்கிறது. இது குறித்து பல ஆண்டுகளாக கலெக்டர்களிடம் மனு கொடுக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களாக வருபவர்களும் எட்டிப் பார்க்கிறார்கள்.கடைசியில், 'போதுமான நிதியில்லை... சீக்கிரமே முயற்சி பண்ணுவோம்' என்றே சொல்லிக் கலைகிறார்கள்.இது ஓர் உதாரணம்தான். இதேபோல தமிழகம் முழுக்க ஏகப்பட்ட அதிஅத்தியாவசியமான பணிகள் செய்து முடிக்கப்படாமலேதான் இருக்கின்றன.
நாட்டுக்கு மிகமிகத் தேவையானது விவசாயம். அத்தகைய விளைநிலங்களைக் காப்பாற்றும் வகையில் ஆற்றின் கரையை உயர்த்த சில கோடிகள் தேவைப்படுகின்றன. அதற்கெல்லாம் நிதி இல்லை. ஆனால், ஏற்கெனவே கோடிகளில் இழைக்கப்பட்டு நன்றாக இருக்கும் அந்த இரண்டு சமாதிகளுக்கும் மீண்டும் கோடிகளைக் கொட்டுகிறார்கள்.-

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook